நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒருசில மாநிலங்களில் இரவுஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இரவு 8 மணி வரை மட்டுமே வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்த நிலையில் ரமலான் நோன்பு தொடங்குவதாக இஸ்லாமிய மக்களின் கோரிக்கையை ஏற்று வரும் ஏப்ரல் 14ஆம் தேதி முதல் அடுத்த 30 நாட்களுக்கு தராவீஹ் எனப்படும் சிறப்பு தொழுகை நடத்த இரவு 10 மணி வரை அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.