ஈரோடு மாவட்டத்தில் 3 கோடி இன்சூரன்ஸ் தொகைக்காக மனைவியே கணவரை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 3 கோடி இன்சூரன்ஸ் தொகையை பெறுவதற்காக மனைவி தன் கணவரை கொல்ல திட்டமிட்டுள்ளார். அதனால் கணவரை காருடன் எரித்து கொன்றுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவர் 3 கோடிக்கு விபத்து காப்பீடு செய்திருந்ததாகவும்,அதனைப் பெறுவதற்கு மனைவியே பெட்ரோல் ஊற்றி காருடன் கணவரை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து அந்தப் பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் பணத்திற்காக எதையும் செய்யும் அளவிற்கு மக்கள் துணிந்து விட்டனர் என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.