Categories
தேனி மாவட்ட செய்திகள்

நல்லது செய்ய போனவருக்கு இப்படியா நடக்கனும்…. சட்டமன்றத் தேர்தல்…. தேனி மாவட்டம்….!!

தேனியில் வாக்குச்சாவடியில் நடந்த கலவரத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் சின்னமனூரில் கூலித் தொழிலாளியான முருகன் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் தற்போது நடைபெற்ற தேர்தலையொட்டி அதே பகுதியிலிருந்த வாக்குச்சாவடியில் அ.தி.மு.க சார்பாக பூத்து ஏஜென்டாக இருந்துள்ளார். அப்போது அங்கு வாக்கு சேகரிப்பது குறித்து அ.தி.மு.க, தி.மு.க கட்சியினருக்கிடையே தகராறு ஏற்பட்டதில் இருதரப்பும் ஒருவரையொருவர் தாக்கியுள்ளனர்.

இதனைத் தடுக்க முயன்று உள்ளே சென்ற முருகனையும் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவருக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |