Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நீங்கெல்லாம் நண்பர்களா…? கொடூரமாக கொலை செய்யப்பட்ட கூலி தொழிலாளி… கோவையில் பரபரப்பு…!!

கூலித்தொழிலாளியை அவரது நண்பர்கள் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சொக்கம்புதூர் பகுதியில் சந்துரு என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்கள் இரண்டு பேருடன் இணைந்து தடாகம் சாலையில் இருக்கும் ஒரு டாஸ்மாக் மதுபான பாருக்கு மது அருந்த சென்றுள்ளார். இந்நிலையில் மது அருந்திக் கொண்டிருந்த போது சந்துருவுக்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த சந்துருவின் நண்பர்கள் இரண்டு பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சந்துருவின் கழுத்து மற்றும் வயிறு பகுதியில் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் சந்துருவை மீட்டு கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை பார்த்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய 2 சந்துருவின் நண்பர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |