தமிழக சட்டசபையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிடடார்.
தமிழக சட்டப்பேரவை கடந்த பிப்ரவரி 8_ஆம் தேதி தொடங்கிய போது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அதன் மீதான விவாதம் பிப்ரவரி 11 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. பின்னர் நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை காரணம் காட்டி சட்டசபை ஒத்திவைக்கப்பட்ட்து. பின்னர் தேர்தல் முடிவடைந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் கூடிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நபிடைபெற்றது.
ஜூன் 28_ஆம் தேதி முதல் 20_ஆம் தேதி வரை நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் துறைரீதியான நிதி ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல், 110 விதிகளின் கீழ் தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இதை தொடர்ந்து நிறுத்திவைக்கப்படட வேலூர் மக்களவை தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து காலை மாலை என விரைவாக பேரவை நடத்தப்பட்டது.இதை தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவித்துள்ளார்.