திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே பட்டாளம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பெண்கள் குத்துவிளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை அருகே மல்லியம்பட்டியில் சிறப்பு வாய்ந்த பட்டாளம்மன், முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு சாமி ஊர்வலம், அம்மன் அழைப்பு ஆகியவை நடைபெற்றது. இந்த விழாவில் அலகு குத்தியும், தீச்சட்டி எடுத்தும் பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.
விழாவை முன்னிட்டு குத்துவிளக்கு பூஜை நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கோவில் முன்பு குத்து விளக்குகளை ஏற்றி வழிபாடு செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குத்து விளக்கு பூஜையை பார்வையிட்டனர். மேலும் அம்மனை பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். இதில் மதுரை, நிலக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து வந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கிராம மக்கள் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.