இந்தியாவில் தற்போது கொரோனா பரவலானது மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதனால் அரசியல் பிரபலங்களும், சினிமா பிரபலங்கள் என பலரும் தற்போது பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஏற்கனவே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதையடுத்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா உறுதியானதால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். இவர் ஏற்கனவே 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டது குறிப்பிடத்தக்கது. இதனால் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.