டுவிஸ்டுகளுடன் சீனாவில் திருமணம் ஓன்று நடந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீன நாட்டில் ஜியாங்க்சு என்ற நகரில் இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார். அவர் அப்பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்தார். பின்னர் பெற்றோர்களின் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் திருமண நாள் அன்று மாப்பிள்ளை மணமேடையில் அமர்ந்து இருக்க மணப்பெண் வருவதற்கு தாமதம் ஆனதால் மாப்பிள்ளையின் தாய் மணமகளின் அறைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது மணப்பெண்ணின் உடம்பில் உள்ள மச்சத்தை கண்டு அதிர்ந்துபோன மாப்பிள்ளையின் தாய் கண்ணீரில் மூழ்கியுள்ளார்.
இது குறித்து அவரிடம் விசாரிக்கையில் சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு காணாமல் போன தனது மகள் தான் இந்த மணப்பெண் என கூறியுள்ளார். இதுகுறித்து மணப்பெண்ணின் பெற்றோரிடம் விசாரிக்கும்போது சிறுவயதில் ரோட்டோரத்தில் அழுது கொண்டிருந்த சிறுமியை எடுத்து வளர்த்து வந்ததாக அவர்கள் கூறியுள்ளனர். பின்னர் மாப்பிள்ளை மற்றும் மணப்பெண் அண்ணன் தங்கை உறவு என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது.
அது என்னவென்றால் மணமகனும் அவருடைய பெற்றோருக்கு வளர்ப்பு பிள்ளை என்பதே ஆகும். அதாவது மணமகனின் பெற்றோர் தன்னுடைய மகள் சிறுவயதில் தொலைந்து போனதால் ஒரு ஆண் பிள்ளையை எடுத்து வளர்த்து வந்ததாக கூறியுள்ளனர். இந்நிலையில் இரண்டு பக்கத்திலும் உள்ள உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்ததால் இருவரும் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியில் திளைத்து இருக்கின்றனர். இது அவர்களுடைய வாழ்வில் மிகப்பெரிய டுவிஸ்டாக இருந்திருக்கும் எனக் கூறப்படுகிறது.