சிவகங்கையில் அரசு பேருந்தும், லாரியும் மோதிக் கொண்டதில் 10 பேர் பலத்த காயமடைந்தனர்.
நேற்று காலையில் தொண்டி நோக்கி மதுரையில் இருந்து அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்து சிவகங்கை பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக திருப்பத்தூரில் இருந்து மானாமதுரை நோக்கி சென்ற லாரியுடன் வேகமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
மேலும் இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்த 10 பேர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து சிவகங்கை நகர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.