“தொலைநோக்கு சிந்தனையுடன் கூடிய புதிய கல்விக்கொள்கை அமலாக வேண்டும்” என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவரான சரத்குமார் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ரயில்வேதுறை அமைச்சர் பியூஸ்கோயலையும், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் ஆகியோரை சரத்குமார் சந்தித்து பேசினார் . அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,விருதுநகரில் அண்மையில் திறக்கப்பட்ட காமராஜர் மணிமண்டபத்தை பொதுமக்கள் கண்டுசெல்லும் வகையில், அனைத்து ரயில்களும் விருதுநகரில் நின்று செல்லும்படி கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் உலக கல்வி தரத்திற்கு இணையாக, உருவாக்கப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கையை தான் வரவேற்பதாகவும் கூறினார் . மேலும், எந்த மொழியை கற்கவேண்டும் என்பதை பெற்றோர்கள் முடிவு செய்ய விட்டுவிட வேண்டும் எனவும் தெரிவித்தார்.