கும்பகோணத்தில் ஒரே இடத்தில் 1000 மரக்கன்றுகளை நட்டு ஒரு குறுங்காட்டையே உருவாக்கி கால்நடை தம்பதியினர் மகிழ்ச்சி அடைந்தனர் .
அமெரிக்காவில் கால்நடை மருத்துவம் படித்த ஆனந்தும் அவரது மனைவி ஆனந்தியும் தாய்மண்ணின் மீது கொண்ட அன்பால் நாடுதிரும்பினர். இந்த தம்பதியினர் சொந்த ஊர் ஆன கும்பகோணத்தில் விவசாயம் செய்து வருகின்றனர் .ஜப்பானிய முறைப்படி ஒரே இடத்தில் 1000 மரக்கன்றுகளை நட்டு குறுங்காடு ஒன்றை உருவாகியுள்ளனர் . அதாவது 20 அடிக்கு ஒரு மரம் நடவேண்டிய இடத்தில் 2 அடிக்கு ஒரு மரமாக நட்டு குறுங்காடு ஒன்றை உருவாகியுள்ளனர் . இதனால் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டு 3 வருடத்தில் வளரும் மரங்கள் ஒரே வருடத்தில் வளரும் என்றும் தம்பதியினர் தெரிவிக்கின்றனர் .
இது கோவிலுக்கு சொந்தமான தரிசு நிலத்தில் அனுமதி பெற்று சீத்தா ,பலா ,வேம்பு உள்ளிட்ட 1000 மரங்களை நட்டு அதனை சொட்டு நீர் பாசனத்தின் மூலம் வளர்த்து வருகின்றனர் .இந்த குறுங்காடுகளால் மழைப்பொழிவு அதிகரிக்கும் என்றும் சிறிய உயிரினங்கள் பறவைகள் வாழ்விடமாக அமையும் என்றும் தெரிவிக்கின்றனர் .”மரம் அழிந்தால் மனித சமுதாயமே ” அழியும் என்று வருங்கால தலைமுறையினருக்காக சிறுவனத்தையே உருவாக்கி வருகின்ற கால்நடை மருத்துவம் படித்த இளம் தம்பதியினர் செயல் பாராட்டுக்குரியது .தனிமரம் தோப்பாகாது ஆனால் தனி மனிதர்கள் நினைத்தால் தோப்பையும் உருவாக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளனர் .