Categories
அரசியல் பல்சுவை மாநில செய்திகள்

ஜெயலலிதா திமுகவை புறக்கணித்தது போல…. தொடர்ந்து புறக்கணிப்போம் – டிடிவி சூளுரை…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் கோவில்பட்டி தொகுதியில் கடம்பூர் ராஜுவை எதிர்த்து போட்டியிடும் டிடிவி தினகரன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசிய அவர், “இந்த தேர்தலில் தமிழகத்தை ஆளும் துரோகிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும். திமுகவை ஜெயலலிதா எவ்வாறு புறக்க்கணித்தாரோ, அதுபோல தொடர்ந்து புறக்கணிக்க வேண்டும். புதிய விடியலை உருவாக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.

Categories

Tech |