Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் போட்டியில் சிஎஸ்கே அணி… 2 பவுலர்களை இழந்தது …பின்னடைவை சந்திக்குமா சிஎஸ்கே…!!!

ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த, தென்ஆப்பிரிக்கா வீரர் லுங்கி நிகிடி முதல் 2 போட்டிகளில்  விளையாடமாட்டார் என்று  தகவல் வெளியானது.

இந்த ஆண்டிற்கான 14வது  ஐபிஎல் போட்டியானது ,வருகின்ற  9 தேதி தொடங்க உள்ளது. இதில்   10ம்  தேதி மும்பையில் நடைபெறும் போட்டியில் ,சென்னை சூப்பர் கிங்ஸ் அணி- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதிக் கொள்கின்றன. இந்நிலையில் சிஎஸ்கே அணியின் பவுலர் ஹாசலிவுட், ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்துள்ளார். அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டி மற்றும் ஆஷஸ் தொடர் போட்டிகளில் பங்கு பெறுவதால், ஐபிஎல் போட்டித் தொடர்களில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். தற்போது சிஎஸ்கே அணியின் ,வேகப்பந்து வீச்சாளரான தென் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த லுங்கி நிகிடி முதல் 2 போட்டிகளில்  விளையாடமாட்டார் என்று தகவல் வெளியாகியது.

இதுபற்றி சிஎஸ்கே அணியின் சி.இ.ஓ. கே .எஸ் விஸ்வநாதன் கூறுகையில், வேகப்பந்துவீச்சாளர் லுங்கி நிகிடி தென்னாப்பிரிக்க நாட்டில் நடைபெறும் போட்டிகளில் பங்கு பெற்றுள்ளார். அந்த போட்டிகளை முடித்தபின், அவர்  ஐபில் போட்டிக்கு முன் ,7 நாட்கள் தனிமைப்படுத்துதல் போன்ற காரணங்களால் , முதல் 2 தொடரில் , விளையாடமாட்டார் என்று தெரிவித்தார். இதன்பின் சிஎஸ்கே அணியின் 3வது ஆட்டத்திலிருந்து ,அவர் பங்கு பெறுவார் என்று தெரிவித்துள்ளார். இதனால் சிஎஸ்கே அணியின் ஹாசலிவுட் விலகியதை தொடர்ந்து ,முதல் 2 தொடரில் லுங்கி நிகிடியும் அணியில் இல்லாததால் 2 வேக பந்து வீச்சாளர்களை இழந்த நிலையில்  சிஎஸ்கே அணி காணப்படுகிறது .

Categories

Tech |