Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு… அரசு திடீர் முடிவு…!!!

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஆண்டு வகுப்பில் பெற்ற மதிப்பெண்களை தற்போது வழங்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதைய மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.

ஆனால் பள்ளிகள் திறந்த சில நாட்களிலேயே பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதுமட்டுமன்றி தமிழகத்தில் கடந்த 2 வாரமாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மாணவர்களின் நலன் கருதி 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு இல்லாமல் ஆல் பாஸ் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.

அதனைப் போலவே மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கும் அரசு விடுமுறை அளித்துள்ளது. இந்நிலையில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குபொதுத் தேர்தல் நெருங்கிகொண்டு இருப்பதால் அவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அவர்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஆண்டு ஒன்பதாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களையே தற்போது வழங்க பள்ளிக் கல்வித்துறை பரிசீலனை செய்து வருகிறது. பத்தாம் வகுப்பு மாணவர்கள், 11ஆம் வகுப்பு சேர மதிப்பெண்கள் கணக்கீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் கடந்த ஆண்டு 9ஆம் வகுப்பு மதிப்பெண்களையே தற்போதும் வழங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |