பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு புதுச்சேரியில் நாளை ஒருநாள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
அனைத்து கட்சி தலைவர்களும் தங்கள் ஆட்சி அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக போட்டி போட்டுக்கொண்டு வாக்குறுதிகளை அளித்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி அவர்கள் வெளியிடும் தேர்தல் அறிக்கையில் மக்களை கவரும் வகையிலான பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதனையடுத்து அனைத்துக் கட்சியினரும் மக்களை நேரில் சந்தித்து தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவதற்காக பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு புதுச்சேரியில் நாளை ஒருநாள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் புதுச்சேரி நகரில் நாளை ட்ரோன்கள் உள்ளிட்டவை பறக்க தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 144 தடை உத்தரவை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.