பிரிட்டன் ராணியின் பேரனான பீட்டர் பிலிப்ஸ் திருமணமான பெண்ணை ஸ்காட்லாந்திற்கு சென்று பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டன் ராணியின் பேரனான பீட்டர் பிலிப்ஸ் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி ஸ்காட்லாந்துக்கு திருமணமான பெண்ணை பார்க்க சென்றதாக பொதுமக்கள் புகார் செய்துள்ளனர். இதனையடுத்து போலீசார் விசாரித்ததில் பீட்டருக்கு கொரோனா காலத்தில் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது தாயாருடன் வசித்து வரும் பிலிப்ஸை போலீசார் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளனர்.
பீட்டர் ஃபிலிப்ஸ் தொழில் சம்பந்தமாக தான் பயணம் மேற்கொண்டதாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர் .ஆனால் பீட்டர் பிலிப்ஸ் 460 மைல் தொலைவில் குடியிருக்கும் அந்த பெண்மணியை பார்க்க தான் கொரோனா கட்டுப்பாடுகளை எல்லாம் கடந்து சென்றதாகவும் அவரின் ரேஞ்ச் ரோவர் வாகனம் அந்தப் பெண்மணியின் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் பொதுமக்கள் கூறியுள்ளனர். அந்தப் பெண்மணி பிலிப்ஸ்சின் சகோதரி சாராவின் தோழி எனவும் அவர் கணவரை பிரிந்து இருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.