Categories
மாநில செய்திகள்

திமுக எம்.பி. ஆ.ராசா மீது 3 பிரிவுகளில் வழக்கு…. மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி ..!!

முதல்வரை அவதூறாக பேசிய திமுக எம்பி ஆ. ராசா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது தொகுதிகளில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். நேற்றைய தினம் ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ஆ.ராசா பரப்புரையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது தமிழக முதல்வர் பழனிசாமி குறித்து அவதூறாக பேசியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு பல தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையே திமுகவை சேர்ந்த  நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா  மீது அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் திருமாறன் தலைமையில் தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகுவிடம் புகார் அளிக்கப்பட்டது. முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக, திமுக ஆ ராசா மீது 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அவர் மீது ஆபாசமாகத் திட்டுதல், தேர்தல் விதிமீறல், கலகம் செய்யத் தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |