மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதற்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் 320 பேர் பலியாகி உள்ளனர்.
மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி, பிப்ரவரி 1ஆம் தேதி ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. மேலும் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து ராணுவ ஆட்சிக்கு எதிராக அங்கு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் .
நாட்டில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க கோரியும், சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த போராட்டத்தை இராணுவம் ஒடுக்கி வருகிறது. ஆனாலும் போராட்டம் நடந்து கொண்டே இருக்கின்றது. இந்நிலையில் ஆட்சி கவிழ்ப்புக்கு எதிரான போரட்டத்தை ஒடுக்க ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 320ஆக உயர்ந்துள்ளது.