8 வருடங்களுக்கு பிறகு வெளியான நடிகையின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் அவரா இவர்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கடல். நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் துளசி ஆகியோர் முதல் முறையாக இப்படத்தில் அறிமுகமாகினர். கௌதம் கார்த்திக் பிரபல நடிகரான கார்த்தியின் மகனாவார். அதேபோல் துளசியும் பிரபல நடிகை ராதாவின் மகள் ஆவார்.
இதைத்தொடர்ந்து துளசி ஜீவாவுடன் யான் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு அவர் வெளிநாட்டில் தனது படிப்பைத் தொடர சென்றுவிட்டார். இந்நிலையில் 8 வருடங்களுக்குப் பிறகு துளசியின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்தப் புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் பலர் துளசியா இது? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏனென்றால் இந்த புகைப்படத்தில் துளசி மிகவும் குண்டாக இருப்பது போல் தெரிகிறது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.