குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திடீரென நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் நலமாக இருப்பதாகவும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் பிரதமர் மோடி தொடர்பு கொண்ட குடியரசுத்தலைவரின் உடல்நலம் பற்றி விசாரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது