Categories
மாநில செய்திகள்

ஏப்ரல் 2ஆம் தேதி முதல்…. வெப்ப நிலை உயரும் – வானிலை மையம் தகவல்..!!

தமிழகத்தில் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் வெப்பநிலை உயர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது. ஆங்காங்கே சில மாவட்டங்களில் மழை பெய்தாலும், பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் தமிழகத்தில் வெயில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

காற்று வடமேற்கு திசையிலிருந்து தமிழகம் நோக்கி வீச உள்ளதால் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பநிலை உயரும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |