Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு தபால் வாக்குகளை வீடுகளுக்குச் சென்று வழங்கும் பணி நடைபெற உள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதற்கு மத்தியில் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக அனைத்து கட்சிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறது. அதுமட்டுமன்றி ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் மக்களை கவரும் வகையிலான பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் போட்டியிடும் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்த வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மக்களை நேரில் சந்தித்து ஓட்டு சேகரிக்கும் பணியில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான தபால் வாக்குகளை வீடுகளுக்குச் சென்று வழங்கும் பணி சென்னையில் இன்று தொடங்குகிறது. 80 வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகளிடம் 70 குழுக்கள் வருகின்ற 31ம் தேதி வரை ஏழு நாள் தபால் ஓட்டுகளை வழங்கும். வீடுகளுக்கு நேரடியாகச் சென்று வாக்காளர்களால் பூர்த்தி செய்யப்பட்ட படிவம் 12டி உள்ள விவரங்கள் படி, வாக்காளரின் அடையாள விவரங்களை உறுதி செய்த பிறகு தபால் வாக்கு சீட்டு வழங்கப்படும்.

Categories

Tech |