ராணுவ பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற பேருந்தில், நக்சல்வாதிகள் கண்ணிவெடிகள் வைத்து தாக்குதல் நடத்தியதில் 5 வீரர்கள் உயிரிழந்தனர் .
சத்தீஸ்கர் மாநிலத்தில் நாராயண்பூர் மாவட்டத்திலுள்ள கடேமேத்தா – கன்ஹார்கோன் என்ற இரு கிராமங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் ,நக்சல்வாதிகள் இருப்பதாக ராணுவத்திற்கு தகவல் கிடைத்தது. இதற்காக ராணுவ பாதுகாப்பு படை வீரர்கள் ,அந்த பகுதிலுள்ள மக்களை பாதுகாக்க பேருந்தில் சென்றனர் .பாதுகாப்பு வீரர்கள் நக்சல் வாதிகளுக்கு எதிராக ,தாக்குதலை நடத்த பேருந்தை திரும்பிக்கொண்டிருந்தனர். ஆனால் பேருந்து திரும்பியபோது கண்ணிவெடியில் சிக்கி கொண்டது .
இதனால் பேருந்து கண்ணிவெடியில் சிக்கி ,வெடித்து தூக்கி வீசப்பட்டது. இதனால் சம்பவ இடத்திலேயே 3 வீரர்கள் உயிரிழந்தனர். காயமடைந்த வீரர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வீரர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தனர். நக்சல் வாதிகள் தாக்குதலில் ,5 வீரர்கள் உயிரிழந்த சம்பவமானது சோகத்தை ஏற்படுத்தியது .