Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும்…. தீவிரம்… வெளியான அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது.

இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா  பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 5 நாட்களாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது. அதனால் மக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது. எனவே அதிகம் பாதிப்பு உள்ள மாவட்டங்கள் மற்றும் மாநகர பகுதிகளில் தடுப்பூசி போடுவதே தீவிரப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பேருந்துகள் மற்றும் பொது போக்குவரத்தில் பயணம் செய்வோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கொரோனா தடுப்பு வழி நெறி முறைகளை மீறுவோர் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று அனைத்து மாவட்ட நிர்வாகத்திற்கும் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |