Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கோடை காலத்துக்கு ஏற்றது… எலும்பு தேய்மானத்துக்கு நல்லது… இன்னும் பல நன்மை தரும் கேழ்வரகு..!!

கேழ்வரகை நம் உணவில் சேர்த்து வந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கேழ்வரகு உணவை நம் அன்றாட உணவில் சேர்த்து வந்தால் உயர் ரத்த அழுத்தம்,  இதய நோய் போன்றவற்றை தடுக்கும்.

குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு எலும்புகள் வலிமையாக தேவையான கால்சியம் சத்து கேழ்வரகில் உள்ளது.

கேழ்வரகில் புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தயமின், கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் உள்ளது.

கேழ்வரகில் அதிகமாக இரும்புச்சத்து உள்ளதால் ரத்த சோகை நோயை குணப்படுத்த உதவுகிறது.

கேழ்வரகு கஞ்சியை உணவில் சேர்த்து வந்தால் தாய்பால் அதிகம் சுரக்கும்.

கேழ்விரகு மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மையை போக்க உதவும்.

கேழ்வரகு மாவில் செய்யப்பட்ட கேழ்வரகு கஞ்சி, கேழ்வரகு தோசை போன்றவற்றை குழந்தைகளுக்கு பிடித்தமான வகையில் செய்து கொடுத்தால் அவர்கள் விரும்பி உண்பார்கள். அதனால் அவர்களின் எலும்புகள் வலுப்பெறும்.

உடல் எடையை குறைக்க நினைப்போர் கேழ்வரகை உணவில் சேர்த்துக் கொண்டால், உடல் எடை குறையும். அதிகப்படியான கொழுப்புகளை வெளியேற்றி கொழுப்பின் அளவை குறைக்கும்.

Categories

Tech |