Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி செய்தி… OMG…!!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,437 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்தே மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் குருவனம் பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,437 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,69,804 ஆக அதிகரித்துள்ளது. இன்று 902 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த வாரம் 600 க்கு கீழ் இருந்த கொரோனா பாதிப்பு, இந்த வாரம் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Categories

Tech |