உலகிலேயே மிகப்பெரிய இதுவரை கண்டிராத 300 கிலோ எடையுள்ள பூட்டை ஒரு வயதான தம்பதியினர் தயாரித்துள்ளனர்.
எவ்வளவு பெரிய வீடாக இருந்தாலும் அதன் பாதுகாப்பிற்கு நாம் ஒரு சிறிய பூட்டை தான் போடுவோம். ஒரு இடத்தில் புதிதாக குடியேறுபவர்கள் முதற்கொண்டு புதிய வீடு கட்டுபவர்கள் வரை அனைவரும் பூட்டுக்கு தான் முக்கியத்துவம் தருவார்கள். இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தின் பழம்பெரும் பூட்டு தொழிலாளி ஒருவர் 300 கிலோ எடையுள்ள பூட்டை உருவாக்கியுள்ளார். மேலும் அவர் தனது மனைவியுடன் சேர்ந்து இதனை உருவாக்கியுள்ளார்.
கான்பூரில் இந்த பூட்டு மற்றும் சாவியை கணவன் மனைவி இருவரும் சேர்ந்து உருவாக்கியுள்ளன. அவரது மனைவி ருக்மணி சர்மா. ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்பு இந்த பூட்டு செய்வதற்கான ஆர்டர் கிடைத்ததாக அவர்கள் கூறுகின்றனர். இன்னும் பல மாற்றங்கள் செய்யவேண்டி உள்ளதால் இதன் எடை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். அந்த மாற்றங்களை செய்தால் சுமார் 350 கிலோ அதிகரிக்கும். கிட்டத்தட்ட ஓராண்டு உழைப்பிற்குப் பின் இந்த பூட்டை உருவாக்கி உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
பூட்டு குறித்த சுவாரசியத் தகவல்கள்
- அகலம் – 6 அடி
- உயரம் – 2 அடி 9 அங்குலம்
- எடை – 300 கிலோகிராம்
- பூட்டின் சாவி – 3 அடி நான்கு அங்குலம்
- சாவியின் எடை – 25 கிலோ