மனைவி மீது சந்தேகப்பட்டு இரும்பு கம்பியை பழுக்க வைத்து சூடு வைத்த கணவனை போலீசார் கைது செய்தனர்.
மும்பையின் போவாய் பகுதியை சேர்ந்த ரவிசங்கர் சவுகான் என்பவர் அப்பகுதியில் பாதுகாப்பு சேவை நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி பூஜா. இவர் வீட்டில் இருந்து வருகிறா.ர் இவருக்கும் பக்கத்து வீட்டுக்காரருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் பேசி வந்துள்ளனர். ஆனால் இதனை அவரது கணவர் தவறாக எடுத்துக்கொண்டு, இருவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகித்து வந்துள்ளார்.
இந்நிலையில் மார்ச் 6 ஆம் தேதி குடித்துவிட்டு வந்து அவரது மனைவியிடம் சண்டையிட்டு உள்ளார். இதில் அவர் மனைவி கணவனை எதிர்த்து பேசவே, ஆத்திரமடைந்த அவர் இரும்பு கம்பியை பழுக்க வைத்து 6 மணிநேரத்துக்கும் மேலாக மனைவியை அங்கும், இங்கும் உடம்பில் சூடு வைத்துள்ளார். பின்னர் அவரே மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளார். இதையடுத்து அந்தப் பெண் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தனது கணவன் கொடுமைப்படுத்தியதாக புகார் அளித்தார்.புகாரின்பேரில் போலீசார் அந்த கணவனைப் கைது செய்தனர்.