Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் திருந்த மாட்டிங்களா.. திருட்டுத் தனமாக வாலிபர் செய்த செயல்… மடக்கி பிடித்த அதிகாரிகள்..!!

பொம்மசமுத்திரத்தில் திருட்டுத்தனமாக லாரியில் மணல் கடத்தி சென்ற வாலிபரை பறக்கும் படையினர் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைப்பெற உள்ள நிலையில்  எந்த  வித ஊழல் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள பொம்மசமுத்திரத்தில் நேற்று பறக்கும் படையினர்  வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது  அவ்வழியாக  வந்த ஒரு லாரியியை பிடித்து சோதனை செய்ததில்  அதில் மணல் ஏற்றி வந்ததை காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து அந்த லாரியை பறிமுதல் செய்து காவல்  நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இதுக்குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |