Categories
மாநில செய்திகள்

9, 10, 11 மாணவர்கள் “ஆல் பாஸ்” அரசாரணையை ரத்து செய்ய…. உயர்நீதிமன்றம் மறுப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால்  மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெற்றோர்களின் கருத்து கேட்பிற்கு பின்னர் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதையடுத்து 9 முதல் 11ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதாமலேயே ஆல்பாஸ் என்று தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது .

இந்நிலையில் தமிழகத்தில் 9, 10, 11-ம் வகுப்புகளில் படிக்கும் அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்றதாக அறிவித்த அரசாணையை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Categories

Tech |