Categories
தேசிய செய்திகள்

கொரோனாவை ஒழிக்க காயத்திரி மந்திரம், பிராணயாமா?… வெளியான புதிய தகவல்…!!!

கொரோனாவை ஒழிக்க காயத்ரி மந்திரம் மற்றும் பிராணயாமா யோகாசனம் உதவுமா என தீவிர ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு யாரும் செல்லாத வகையில் போக்குவரத்து சேவை முடக்கப்பட்டது. கொரோனாவால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில்உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில் பெரும்பாலான நாடுகளில் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

சில நாடுகளில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் காயத்ரி மந்திரம் மற்றும் பிராணயாமாவின் யோகாசனம் கொரோனாவை குணப்படுத்துகிறதா என்பதை கண்டறிய அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் முயற்சி செய்து வருகிறது. இதற்காக ரிஷிகேஷில் உள்ள மருத்துவ மற்றும் சோதனை துறைக்கு நிதி உதவி அளித்துள்ளது. மேலும் விரைவில் ஆய்வு முடிவுகள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Categories

Tech |