சேர்ந்தமங்கலத்தில் வீட்டை இடிக்கும் போது சுவர் சரிந்து மேலே விழுந்ததால் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்திலுள்ள சேந்தமங்கலம் பேரூராட்சியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டை இடித்து புது வீடு கட்ட வேண்டும் என்பதற்காக நேற்று காலை கட்டிட தொழிலாளி ராமசாமியுடன் 5 தொழிலாலார்களை அவர் வீட்டிற்கு வர செய்துள்ளார். இதனையடுத்து வீட்டின் மேற்கூரையை அகற்றிய பின்பு இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது திடீரென பக்கவாட்டில் இருந்த மண் சுவர் சரிந்து, ராமசாமி மீது விழுந்ததில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினருக்கு வீட்டின் முதலாளி ரமேஷ் தகவல் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.