Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதுக்கு மேல அவர் கூட என்னால வாழ முடியாது… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… திண்டுக்கல்லில் சோகம்..!!

நிலக்கோட்டை அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மல்லியம்பட்டியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகா என்ற மனைவி இருந்தார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கணவன்-மனைவி இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் கார்த்திகா மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் இச்சம்பவம் குறித்து நிலக்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கார்த்திகாவின் உடலை கைப்பற்றி நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கார்த்திகாவின் தந்தை ஜெயராமன் நிலக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தற்கொலை செய்துகொண்ட கார்த்திகாவிற்க்கு திருமணம் ஆகி ஐந்து ஆண்டுகள் ஆவதால் ஆர்.டி.ஓ மேல் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Categories

Tech |