Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அங்கும் இங்கும் தாறுமாறாக ஓடி…. சாலையில் கவிழ்ந்த சரக்கு வாகனம்… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த சம்பவம்…!!

பொன்னமராவதியிலிருந்து ஆட்களை ஏற்றி சென்று கொண்டிருந்த சரக்கு வாகனம் திடீரென கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதியிலிருந்து, பிடாரம்பட்டிக்கு ஒரு சரக்கு வாகனம் ஆட்களை ஏற்றி சென்று கொண்டிருந்தது. வாகனத்தை டிரைவர் ஜீவா ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில்  காயாம்புஞ்சை என்ற இடத்தில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று கார்த்திக்கின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் கவிழ்ந்தது. இதனால் வாகனத்தில் பயணித்த  கைக் குழந்தைகள் உட்பட 17 பேர் மிகவும் காயமடைந்துள்ளார்கள்.

இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை  மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  இதில் பலத்த காயமடைந்த ரேவதி,நல்லம்மாள், அன்டிச்சி ஆகிய மூன்று பேர் மட்டும் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் இந்த விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு  வருகிறார்கள்.

Categories

Tech |