Categories
மாநில செய்திகள்

BREAKING: காய்கறி கடைகள் அனைத்தும் மூடல்…. வெளியான அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் நலனைக் கருதி வார சந்தைகளை காலவரையின்றி மூடல் உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்தே மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் குருவனம் பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் என்எல்சி நிறுவனத்துக்கு உட்பட்ட நெய்வேலி டவுன்ஷிப்பில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மக்களின் அரணை கருதி அனைத்து வார சந்தைகளும் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் கொரோனா அதிகரித்து வருவதால், மீண்டும் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |