Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: அமைச்சர் தங்கமணி ஆதரவாளர்களால் உயிருக்கு ஆபத்து… அதிமுக எம்எல்ஏ பரபரப்பு புகார்…!!!

அமைச்சர் தங்கமணி ஆதரவாளர்களால் உயிருக்கு ஆபத்து என அதிமுக எம்எல்ஏ பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டு வருகிறது.

அதுமட்டுமன்றி தொகுதி பங்கீடு பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, தங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக ஒவ்வொரு கட்சியும் போட்டியிட்டுக் கொண்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அதில் மக்களை கவரும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் மக்களைக் கவர அனைத்து கட்சியினரும் மக்களிடம் நேரடி தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் போட்டியிடும் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார்கள். ஆனால் சில தொகுதி எம்எல்ஏக்கள் தங்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காததால் அதிருப்தியில் உள்ளனர். இதனையடுத்து அமைச்சர் தங்கமணி ஆதரவாளர்களால் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சேந்தமங்கலம் தொகுதி அதிமுக எம்எல்ஏ சந்திரசேகர் போலீசில் புகார் அளித்துள்ளார். தமக்கு வாய்ப்பு கிடைக்காவிட்டால் சுயேச்சையாக போட்டியிடுவேன் என்று எச்சரிக்கை விடுத்து இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

Categories

Tech |