Categories
தேசிய செய்திகள்

பிரதமருக்கு நெருக்கமானவர்…. முதன்மை ஆலோசகர் பதவி விலகல்…. திடீர் முடிவுக்கு காரணம் என்ன….?

பிரதமரின் முதன்மை ஆலோசகர் பி.கே சின்ஹா திடீரென பதவி விலகியது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மை ஆலோசகராக பணியாற்றிய பி.கே. சின்ஹா  தனது பதவியை விட்டு விலகியுள்ளார். முதலில் அமைச்சரவைச் செயலராக 4 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றினார். அப்போது அவருக்கு மூன்று முறை பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. அமைச்சரவைச் செயலராக பணியாற்றிய அவர் 2019 ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார்.

அதன்பின் அவருக்கு பிரதமர் அலுவலகத்தில் முதன்மைச் செயலாளர் என்ற பதவி வழங்கப்பட்டது. நியமன ஆணையில் பிரதமரின் பதவி காலம் வரை முதன்மை செயலராக பி.கே. சின்ஹா பணியாற்றுவார் என குறிப்பிடப்பட்டிருந்தது.கடந்த 18 மாதங்களாக முதன்மைச் செயலாளராக பணியாற்றியவர் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விட்டு விலகுவதாக தெரிவித்துள்ளார். பிரதமருக்கு நெருக்கமானவர் தற்போது பதவி விலகுவது பலரிடையே பல கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியது.

Categories

Tech |