Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,500 கன அடியாக அதிகரிப்பு….. விவசாயிகள் மகிழ்ச்சி …..!!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,500 கன அடியாக அதிகரித்தி துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளில் இருந்து காவிரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.திறந்து விடப்பட்ட நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது. ஏற்கனவே மேட்டூர் அணையின் நீர்மட்டம் 39.13 அடியாக உள்ளது.

Image result for மேட்டூர் அணை

தற்போது அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 213 கன அடியில் இருந்து 1,500 கன அடியாக அதிகரித்துள்ளது. பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து ஆயிரம் கனஅடி வரை நீர் திறக்கப்படுகிறது.  இதனால் தமிழக விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |