Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

எங்க அம்மாவ காணோம் சார்..! நாகையில் பரபரப்பு புகார்… போலீஸ் தீவிர விசாரணை..!!

நாகப்பட்டினம் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட பெண் காணாமல் போன சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திட்டச்சேரியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி இருந்தார். இவர்களுக்கு தனலட்சுமி என்ற மகள் உள்ளார். விஜயலட்சுமிக்கு பத்து வருடங்களாக மனநிலை பாதிப்பு இருந்துள்ளது. இதற்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இரண்டு நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் திடீரென அவரை காணவில்லை. இதுகுறித்து அந்த விஜயலட்சுமி மகள் தனலட்சுமி திட்டச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |