லண்டன் நகரில் இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில், மாயமான வழக்கில் உடற்கூறு ஆய்வில் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
லண்டனில் sarah Everard என்ற பெண்ணை கடத்தியதாக Wayne couzens (48 வயது) நபரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் பெண் ஒருவரின் உடல் பாகங்கள் கைப்பற்றப்பட்டது. உடல் பாகங்களை உடற்கூறு ஆய்வு செய்ததில், இது sarah வின் உடல்தான் என்று பரிசோதனையின் முடிவில் தெரியவந்தது. wayne மீது சுமத்தப்பட்ட கடத்தல் வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டது. இதனால் சிறையில் அடைக்கப்பட்டிருந்த wayne சுயநினைவற்ற நிலையில் இருந்தார்.
தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில் ,அவர் தற்கொலைக்கு முயற்சித்தாரா என்பது குறித்து சொல்வதற்கில்லை என போலீஸ் கூறியது. ஆனால் இவர் மீண்டும் தலையில் புதிய காயங்கள் ஏற்பட்டன மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். இதைத் தொடர்ந்து ,இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.இந்த சம்பவத்தால் அந்நாட்டின் பெண்கள் இங்கு’ பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை’ என்றும்,wayne இவ்வாறு நடந்து கொண்டதால் ‘அனைத்து ஆண்களையும் தவறாக குறிப்பிடுவது சரியல்ல ‘என்று விவாதித்து கொண்டிருக்கின்றனர் .