தமிழகத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு திமுக தான் ஆள போகிறது என்று ஸ்டாலின் சூளுரைத்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்கள்.
அதன்படி அதிமுக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அது மட்டுமன்றி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை இறுதி செய்து கட்சி வெளியிட்டு வருகிறது. இதற்கு மத்தியில் தாங்கள் கேட்ட தொகுதிகளை ஒதுக்காததால் அந்த கட்சியில் இருந்து பிரிந்து சென்று வேறு கட்சியில் இணைந்து வருகின்றனர். அதனால் சற்று பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் திமுக தனது தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது. அதில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அது மக்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு திமுக தான் ஆள போகிறது, இது திராவிட மண், பாஜக நுழைய முடியாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் சூளுரைத்துள்ளார். உதயநிதிக்கு தேர்தலில் சீட் வழங்கப்பட்டது சர்ச்சையான நிலையில், மக்களை சந்தித்து யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், யாரையும் மக்களிடம் திணிக்க முடியாது என்று ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.