Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தேர்தல் பாதுகாப்பு அணிவகுப்பு… துணை ராணுவ படையினர் பங்கேற்பு… போலீஸ் சூப்பிரண்டு தலைமை ..!!

நாகை தலைஞாயிறு பகுதியில் காவல்துறையினர் மற்றும் துணை இராணுவப் படையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ராணுவ வீரர்கள் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளனர். பல்வேறு பகுதிகளில் ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இணைந்து அணிவகுப்பு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தலைஞாயிறு பகுதியில் காவல்துறையினர் மற்றும் துணை இராணுவப் படையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர்.

இந்த அணிவகுப்பிற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாமுகமது, மகாதேவன் ஆகியோர் தலைமை தாங்கியுள்ளனர். இந்த அணிவகுப்பில் சிறப்புக் காவல் படையினர், ஊர்க்காவல் படையினர், இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையினர், ஆயுதப் படையினர் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த கொடி அணிவகுப்பில் காவல்துறை ஆய்வாளர் செந்தில்குமார், மலர்கொடி உட்பட காவல்துறையினர் பலரும் கலந்து கொண்டனர்.

Categories

Tech |