நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. இந்த கொரோனாவானது சாமானிய மக்களை மட்டுமல்லாமல் அரசியல் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் பலரையும் பதம் பார்த்து வருகிறது. இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா உறுதியானதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய உடல்நிலை தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.