சட்டவிரோதமாக ஆறுகளில் இருந்து லாரிகள் மூலம் மணல் அள்ளியவர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டத்திலுள்ள மெலட்டூர், அய்யம்பேட்டை, பாபநாசம் ஆறுகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளபடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த் தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அந்த சமயத்தில் மெலட்டூர், அய்யம்பேட்டை, பாபநாசம் ஆறுகளில் இருந்து மணல் கடத்தி வந்த லாரிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் லாரிகளை ஓட்டி வந்த டிரைவர்களையும் கைது செய்துள்ளனர். இதனையடுத்து வெண்ணாற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளிக் கொண்டிருந்த மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.