Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற சிவாலய பிரதோஷ வழிபாடு… ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்..!!

சிவகங்கை எஸ்.புதூர் அருகே உள்ள சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கரிசல்பட்டியில் கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் கைலாசநாதர் மற்றும் சனீஸ்வரருக்கு அலங்கார பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது. மேலும் சாமிக்கு 16 வகையான அபிஷேகங்களும் செய்யப்பட்டது.

அதேபோல் உலகம்பட்டி உலகநாயகி சமேத உலகநாத சுவாமி கோவிலிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றுள்ளது. அதனை தொடர்ந்து ரிஷப வாகனத்தில் உலகநாயகி சமேத உலகநாத சாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாவித்துள்ளார். இந்த பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர்.

Categories

Tech |