Categories
மாநில செய்திகள்

தேர்தல் பணியில் ஈடுபடும்…. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு…. அதிரடி உத்தரவு…!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதுயடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அதிமுகவினரும், திமுகவினரும் ஒருவரையொருவர் குறைகூறிக்கொண்டு விமர்சனம் செய்து மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. ஒவ்வொரு கட்சியிலும் தொகுதி பங்கிடுவதில் இழுபறியும், கூட்டணி குறித்த குழப்பமும் நீட்டித்து வருகின்றது.

இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. வாக்காளர்களுக்கு ஓட்டிற்கு பணம் விநியோகிப்பதை தடுக்கவும், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கவும் பறக்கும் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வாக்களிக்க கூடுதல் அவகாசம் அளிக்க தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வாக்களிக்க கூடுதல் அவகாசம் வழங்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |