Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

என்ன நடந்துச்சுனே தெரியல… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… சிவகங்கையில் பரபரப்பு..!!

சிவகங்கையில் இளம்பெண் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முசுண்டபட்டி கிராமத்தில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கமணி என்ற மனைவி இருந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று தங்கமணி வீட்டிலிருந்து புறப்பட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பல இடங்களிலும் சென்று தேடிப்பார்த்துள்ளனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் முசுண்டபட்டி பகுதியில் உள்ள சுடுகாட்டில் தங்கமணி மரம் ஒன்றில் தூக்கில் பிணமாக தொங்குவதாக சிலர் தகவல் அளித்தனர்.

அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற உறவினர்கள் தங்கமணி பிணமாக தொங்குவதை கண்டு கதறி அழுதனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புழுதிபட்டி காவல்துறையினர் தங்கமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |