புதுச்சேரியில் என் ஆர் காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பாஜக மற்றும் அதிமுக கட்சிகள் 14 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இதற்கு மத்தியில் தங்கள் ஆட்சி அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக அனைத்து கட்சியினரும் வாக்குறுதிகளை அளித்து வருகிறார்கள். இதனையடுத்து ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் போட்டியிடும் தொகுதி களுக்கு விருப்ப மனு அளித்து வருகிறார்கள்.
இந்நிலையில் புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதியானது. புதுச்சேரியில் என் ஆர் காங்கிரஸ் 16 தொகுதிகளில், பாஜக மற்றும் அதிமுக கட்சிகள் 14 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. என் ஆர் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி கட்சிகள் இந்த தேர்தலை சந்திக்க உள்ளதாக அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.