Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

வன்மையாக கண்டிக்கிறோம்… அரசு பள்ளியை முற்றுகையிட்ட மாணவிகள்… காஞ்சிபுரத்தில் பரபரப்பு..!!

காஞ்சிபுரத்தில் அரசு பள்ளி மாணவர்கள் இலவச மடிக்கணினி வழங்காததை கண்டித்து அரசு பள்ளியை முற்றுகையிட்டுள்ளனர்.

தமிழக அரசு பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கி வருகிறது. இந்நிலையில் 2017 மற்றும் 2018-ம் ஆண்டு சென்னை போரூர் அருகே சின்ன போரூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச மடிக்கணினி இதுவரை வழங்கப்படவில்லை என்று கூறுகின்றனர். விலையில்லா மடிகணினி வழங்கப்படாததை கண்டித்து 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் பெற்றோருடன் அரசு பள்ளியை முற்றுகையிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் போரூர் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். தேர்தல் முடிந்த பிறகு அனைவருக்கும் மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், சட்டமன்ற தேர்தல் நேரத்தில் மடிக்கணினி எதுவும் வழங்கக்கூடாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். அதிகாரிகள் வாக்குறுதி அளித்ததையடுத்து மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |