Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: விஜயகாந்த் தனித்து போட்டி… பெரும் பரபரப்பு செய்தி…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு குறைந்த தொகுதிகள் ஒதுக்கிய நிலையில் தனித்து போட்டியிடுவது பற்றி தேமுதிக ஆலோசனை நடத்தி வருகிறது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி அதிமுக கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. மேலும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விருப்ப மனு தாக்கல் செய்து வருகிறார்கள். இதனையடுத்து ஒவ்வொரு கட்சியினரும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதிலும் சில காட்சிகளில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.

தங்களுக்கு உரிய தொகுதி ஒதுக்காததால் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்று வேறு கட்சியுடன் கூட்டணி அமைத்து வருகின்றன. அதன்படி அதிமுக கட்சியில் இருந்து பலரும் விலகிச் சென்று திமுக போன்ற பல கட்சிகளின் கூட்டணி வைத்துள்ளனர். அதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வருகின்ற சட்டசபைத் தேர்தலில் தேமுதிகவிற்கு 13 தொகுதிகளை மட்டும் முதுகை இயலும் என்று அதிமுக திட்டவட்டமாக முடிவு எடுத்துள்ளது. 9 தொகுதிகளில் பேச்சுவார்த்தை ஆரம்பித்து, தற்போது 13 தொகுதிகள் வரை கொடுக்க முன்வந்துள்ள அதிமுக, 11 தொகுதிகளுக்கு மேல் ஒரு சீட் கூட தர முடியாது என்று கறாராக கூறி விட்டது.

இதனையடுத்து சென்னையில் தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். அதிமுக குறைந்த தொகுதிகளை ஒதுக்க நிலையில், அதே தொகுதியில் போட்டியிடுவதா அல்லது தனித்துப் போட்டியிடுவதா என்பது பற்றி தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகின்றது.

Categories

Tech |